Children’s Drama Training

சிறுவர்களுக்கான நாடகப் பயிற்சி                                                                                                  
……………………………………………..                                                                                                                       புதிய பயிற்சிப் பிரிவுகள் ஆரம்பமாகின்றன  இணைந்து கொள்ளலாம்.    

 

சிறுவர்களின் உடல், உள ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட செயல் முறைப் பாடத்திட்டத்தைக்  கொண்ட பயிற்சி..                                                         பயிற்சியில் பங்கு கொள்பவர்கள் சிறுவர் நாடகங்கள் நடிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.  அதனோடு வட இலங்கை சங்கீத சபையின் நாடகமும் அரங்கியலும் பரீட்சைக்கு தோற்றமுடியும்.
பயிற்சி நடைபெறும் நாட்கள் நேரம் : வெள்ளி, சனி, ஞாயிறு
                                                                        மாலை 5.00 மணி – 08 மணி வரை
வயதெல்லை : 10 – 15
பயிற்சி நடைபெறும் இடம் : ‘முற்றம்’ ,203/ 5 கச்சேரி நல்லூர் வீதி ( சென்.பெனடிக் பாடசாலை முன்பாக) நல்லூர் யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கான வட்சப் இல, ஈ.மெயில் : 0773112692, jaffnatheatre@gmail.com

பதிவுகளுக்கான கூகிள் படிவம் : https://forms.gle/MTmpYX4Ta7i6F3X38

Comments on WhatsApp about Nallur Drama Festival 2023

01/09, 9:50 pm] +1 (647) 588-3179: இன்று கூடிவிளையாடு பாப்பா நாடகம் பார்த்தேன். 45 வருடங்களுக்கு முன்னர் கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் பார்த்தது. வட்டக்களரி மேடை நாடகத்துக்கு சிறப்பாக இருந்தது. பின் மேடையில் காட்சிகளை வரைந்து காட்டியமை புதிது. நடிகர்கள் மேடையை மிக இலாவகமாகப் பயன்படுத்தினர்.பிற்பாட்டுப்  பாடிய சிறார்களின் பங்களிப்பு  பாராட்டத்தக்கது.  

—-ப. ஶ்ரீஸ்கந்தன்.

[01/09, 11:02 pm] Deivy: நான் இந்நாடகத்தை நல்லூர் நாடகத் திருவிழாவில்  பல முறை பார்த்துள்ளேன். ஆனால் இம்முறை புதுவடிவ வட்ட மேடையில் அரங்கேறியமை சிறப்பு.  படங்களை சுவரில் வரைந்து காட்டியமை புதுமையான ஓரு நுட்பம். பாத்திரங்களின் நடிப்பு அற்புதம். அனைத்து சிறுவர்களினதும் குதூகலத்துடன் கூடிய சிரிப்பு அவர்களினது ஈடுபாட்டை காட்டியது. நன்றி தேவா அண்ணா.

தெய்வி. தபோதரன்

மீண்டுமொரு குதூகலம்

செயல் திறன் அரங்க இயக்கம்/முற்றம் களத்தில் இன்று மீண்டுமொரு குதூகலம்

நல்லூரில் அமைந்துள்ள முற்றம் நாடகக் களத்தில் இன்று (22.09.2023)மீண்டுமொரு குதூகலம்இ அண்மையில் நல்லூர் நாடகத்திருவிழா நிறைவுற்று சிறுவர் நாடகக்கழகத்தின் பயிற்சிகளை ஆரம்பித்திருந்தோம். வுழமையாக வெள்ளி ஞாயிறு தினங்களில் மாலை 6.30 மணிக்கு சந்திப்பது வழமை. அந்த அடிப்படையில் இன்று பயிற்சியில் ஈடுபடுவதாக இருந்தது. அதற்கிடையில் பகல் வேளையில் அமெரிக்க Popular Culture ஆய்வாளர் Kristen Rudisill சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்கள் சிறுவர் நாடக்ககுழு மற்றும் அவர்களின் நாடகங்கள் பற்றி உரையாடினோம். அவர் எமது நாடக மேடைக்கு அருகில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் முடிந்தால் மாலை நடைபெறும் சிறுவர்களுக்கான பயிற்சிக்கு வாருங்கள் என்று சொல்லியிருந்தேன். பின்னர் தனது வரவை உறுதிப்படுத்தியிருந்தார். அவர் வரும் போது முடிந்தால் முயலார் முயல்கிறார் நாடகத்தை செய்து காட்டலாம் என்று எண்ணியிருந்தோம். இந்தத்தகவலைப் பகிர்ந்ததும் வேடஉடையணிந்து நடிக்க சிறுவர்கள் தயாரானார்கள். அவசர அவசரமாக பெற்றோரிடம் வேடஉடை கைப்பொருட்களை கொண்டு வருமாறு கூறினார்கள். தாங்களே முக ஒப்பனைகளையும் போட்டுக் கொண்டு நாடகத்தை செய்து காட்டினார்கள். நாடகம் பார்த்த Kristen Rudisill சிறுவர்களின் திறமை கண்டு வியந்தார். அவர்களிடம் பல விடயங்களை கேட்டறிந்து கொண்டார். அவர் இந்தியாவில் மதுரையில் தங்கியிருந்து சபா நாடகங்கள் பற்றி ஆய்வு செய்துள்ளார்.தமிழும் ஓரளவு பேசுகிறார்இ புரிந்து கொள்கிறார். சபா நாடகங்களைப் பற்றிய Identity and Play in Chennai’s Post-Independence Sabha Theater நூல் ஒன்றையும் வெளிக்கொண்டுவந்திருக்கிறார்.

தற்போது தமிழ்சினிமா நடனம் எவ்வாறு உலகத் தமிழர்களை இணைக்கிறது என்பது பற்றி ஆய்வு செய்வதோடு ஈழத்து நாடக அரங்கு பற்றியும் ஆய்வு செய்கிறார். அவர் ‘முயலார் முயல்கிறார்’ நாடகத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைதார் நடிகர்களைப் பாராட்டினார் அவர்களிடமிருந்து தான் எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உடனே சிறுவர்கள் பறையிசை நடனத்தை அவருக்கு கற்றுக்கொடுத்தார்கள் அதனை கற்றுக்கொண்டார். உற்சாக மிகுதியில் நல்லூர் நாடகத்திருவிழாவில் மேடையேற்;றிய அசிங்கம் நாடகத்தையும் நடித்துக்காட்ட சிறுவர்கள் விரும்பினார்கள் அந்த வேளை நாடகத்தை ஒரு பத்து நிமிடங்கள் தாமதித் தொடங்குமாறு கேட்டுக் கொண்டு தனது காரில் ஓடிச்சென்று தனது இரு குழந்தைகளையும் அழைத்து வந்தார். அவர்கள் மகிழ்ச்சியாக அசிங்கம் நாடகம் பார்த்தார்கள். முடிவில் முசளைவநn சுரனளைடைட இன் இரண்டு மகன்களும் சேர்ந்து ஆடினார்கள்இ அவரின் இரண்டாவது மகன் எமது தாளத்திற்கு உருக்கொண்டாடினான். அது வெள்ளி மாலைநேரக்கொண்டாட்டமாக அமைந்தது. எங்களோடு கமலநாதன் அவர்கள் இணைந்து ‘கூடிவிளையாடு பாப்பா’ நாடகத்தின் துண்டங்களைச் செய்து காட்டினார். சக்திஇ ரஜனிஇ ஜனனீ மற்றும் சிறுவர்களின் பெற்றோர் இணைந்திருந்தார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.நிகழ்வை நாடகர் ஊடகர் தேவானந்த் வழிப்படுத்தினார்.

Nallur Drama Festival 2023

பேரிடர்காலத்தில் உள ஆற்றுப்படுத்தலுக்கான அரங்கு

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் நடத்தும் இணையவழிக் கருத்தரங்கு (26.11.2020 @ 7.00PM)

தலைப்பு : ‘பேரிடர்காலத்தில் உள ஆற்றுப்படுத்தலுக்கான அரங்கு’ ஆர்வலர்கள் இணைந்து கொள்ளளலாம்

Follow on ZOOM ID :646 759 2187

மீண்டும் தொடங்கும் மிடுக்கு……..

18 வருடத்தில் புதுப் பொலிவுடன் பல வரலாற்றுப்பதிவுகளுடனான பயணம்

மிதிவெடி அபாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்திறன்அரங்க இயக்கம்

Theva Photooதேவானந்த்
இடர்கள் கெடுக சிறார்களுக்கான ஆற்றுகை சில பதிவுகள்

அகதிகள் புனர்வாழ்வு அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மிதிவெடி ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வைச் சிறார்கள் மத்தியில் ஏற்படுத்தும் நடவடிக்கையின் ஓர் அம்சமாக  செயல் திறன் அரங்க இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களின் ஒரு ஆற்றுகை நிகழ்வினை அண்மையில் யாழ். கல்வியங்காடு இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் காண நேர்ந்தது.

Read the rest of this entry

கண்ணிவெடி அபாயம் குறித்து எச்சரிக்கும் “நெஞ்சுறுத்தும் கானல்: ஆற்றுகை விமர்சனம்

11115646_1083288828353140_8458608305945931587_nலக்ஸ்மன்
உதயன்
18.03.2002

கண்ணிவெடி, மிதிவெடிகள் குறித்த விழிப்புணர்ச்சியை மாணவர் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு யாழ்.கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற “நெஞ்சுறுத்தும் கானல்” ஆற்றுகை குறித்த ஒரு பார்வை இது.

Read the rest of this entry

களைகட்டத்தொடங்கிவிட்டது நல்லூர் நாடகத் திருவிழா

pa1நல்லூரில் நடப்பது வெறும் கோயில் திருவிழாஅல்ல. அதுதமிழர்களின் பண்பாட்டுத் திருவிழா. திரு என்கிற கடவுளின் விழா. தமிழரின் பாரம்பரியத்தை இன்னும் தன்னகத்தே தக்கவைத்துக்கொண்டிருப்பது. அண்மைக்காலங்களாக அந்தபண்பாட்டுச் சொச்சம் வியாபார ஆதிக்கத்தில் திக்கித் திணறிவந்தாலும்,பண்பாட்டின் எச்சத்தையும் திருவிழாவின் பொலிவையும் இன்னும் மெருகேற்றும் பலதும் நல்லூரைச் சுற்றிஆங்காங்கேநடந்தேறிவரத்தான் செய்கின்றன.

Read the rest of this entry

முடக்கம் : பார்வையாளரின் மனப்பதிவிலிருந்து

DSC01363பிரபா கந்தசாமி
உதவிப் பிரதேச செயலர் யாழ்ப்பாணம்.

சமுதாயத்தின் அடிப்படை அலகு குடும்பம். குடும்பம் முடங்கிப் போவதனூடாக சமூகம் முடங்கிப் போவதைக் காட்ட விளைகிறது முடக்கம்.
றொபேட்டின் குரலுடன் திரை விலக ஆணும் பெண்ணும் நடுவே தூளியில் குழந்தையுமாக ஒரு அழகிய இளம் குடும்பம் செயல் இழந்து கிடப்பது காட்டப்படுகிறது. அப்பொழுது அவனுக்கு கால் இருக்கிறது.
நொண்டியோ, முடமோ குடும்பத் தலைவன் தான் குடும்ப பாரத்தை சுமக்கவேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு. குடும்ப பொருளாதாரத்தை சீர்செய்ய தாய் வீட்டை எதிர்பார்க்கும் பெண்களின் மனோபாவம் காதல் திருமணத்திற்கு சமூகத்தின் வரவேற்பின்மை, காதலித்து திருமணம் புரிந்த போதும் அன்பாக ஆதரவாக இல்லாமல் அவலமாய்ப் போகும் தாம்பத்தியம் அத்திவாரமே ஆட்டம் கண்ட வாழ்க்கை. Read the rest of this entry

Theatre Room Asia

A space that brings together current writing and thinking about theatre and performance from across the globe - to inspire, inform and fascinate

Active Theatre Movement

The Rich Theatre Culture for the Nation Development