Category Archives: Nallur Drama Festival 2015
Comments on WhatsApp about Nallur Drama Festival 2023
01/09, 9:50 pm] +1 (647) 588-3179: இன்று கூடிவிளையாடு பாப்பா நாடகம் பார்த்தேன். 45 வருடங்களுக்கு முன்னர் கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் பார்த்தது. வட்டக்களரி மேடை நாடகத்துக்கு சிறப்பாக இருந்தது. பின் மேடையில் காட்சிகளை வரைந்து காட்டியமை புதிது. நடிகர்கள் மேடையை மிக இலாவகமாகப் பயன்படுத்தினர்.பிற்பாட்டுப் பாடிய சிறார்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது.
—-ப. ஶ்ரீஸ்கந்தன்.
[01/09, 11:02 pm] Deivy: நான் இந்நாடகத்தை நல்லூர் நாடகத் திருவிழாவில் பல முறை பார்த்துள்ளேன். ஆனால் இம்முறை புதுவடிவ வட்ட மேடையில் அரங்கேறியமை சிறப்பு. படங்களை சுவரில் வரைந்து காட்டியமை புதுமையான ஓரு நுட்பம். பாத்திரங்களின் நடிப்பு அற்புதம். அனைத்து சிறுவர்களினதும் குதூகலத்துடன் கூடிய சிரிப்பு அவர்களினது ஈடுபாட்டை காட்டியது. நன்றி தேவா அண்ணா.
தெய்வி. தபோதரன்
children’s dramas in Nallur Drama Festival.
children’s dramas were staged in the Nallur Drama Festival.
“ Sirippu mooddai” (Bundle of laughter) is a children’s drama acted by grownups and children. A problem of the children has produced ads a drama by children and grownups. This drama had as its theme, how the children are being distressed for grade V scholarship examination held countrywide.
The child who never see a laughing face in his daily real life, try to compensate that in the dream he sees in sleep.
In the dream, the child becomes a king. The teachers and Principal who drive him to study come as his guards. They are being asked to find the lost laughter. Finally, the drama ends saying that laughter and happiness are within everybody and not given by anybody else. The children insist that they want a happy life they have lost.
ஏகாந்தம் – தமிழ் நாடக வரலாற்றில் முதல் முறையாக வேடமுக நாடகம்
ஈழத்து நாடகப் பாரம்பரியத்தில் செயல் திறன் அரங்க இயக்கம் தனக்கான தனித்துவமான இடத்தினை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. நாடகத்துறைக்காக மட்டுமே இயங்குகின்ற இந்த நிறுவனம். நல்லூர் நாடகத் திருவிழா 2015 ஐ நடத்தயிதன் மூலம் தனக்கான வரலாற்றை பதிவு செய்திருக்கின்றது. இருபத்தியொரு நாடகங்கள் தொடர்ச்சியாக 12 நாட்கள் நடந்திருக்கின்றன. இதில் 17 நாடகங்களை செயல் திறன் அரங்க இயக்கம் தயாரித்து மேடையேற்றியிருக்கிறது. குறிப்பாக பலவேறு மோடிகளில் மேடையேற்றியது தான இதன் சிறப்பு எனலாம். சிறுவர் நாடகங்கள் – 03 ஓராள் அரங்கு – 10 கவிதை நாடகம் – 02 நகைச்சுவை நாடகம் – 01 வேடமுகநடகம் – 01
இதில் ஓராள் அரங்கும் வேடமுக நடகமும் செயல் திறன் அரங்க இயக்கத்தின் அறிமுக அரங்குகள். ஈழத்து அரங்கிற்கு இது ஒரு வரலாறாகும் எனபதில் சந்தேகம் இல்லை.ஏகாந்தம் முதியொர்பிரச்னையைப் பேசிய அற்புதமான நாடகம். அதன் உத்தி முறைகள் ஈழத்து அரங்கிற்கு புதியவை.
நல்லூர் நாடகத் திருவிழா 2015
நல்லூர் நாடகத் திருவிழா 2015 சிறப்புற நடந்து முடிவடைந்தது. 12 நாட்கள் இருபத்தியொரு பல்வகை நாடகங்கள் நாற்பது ஆற்றுகைகள். இதுவொரு வரலாற்று சாதனையென்றே சொல்லலாம். இறுதி இரண்டு நாட்கள் மட்டுமே பத்து நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. இறுதி நாளன்று வடக்கு மாகாண ஆளுநர் பங்கேற்றிருந்தார். அன்றைய தினம் நிகழ்வின் இறுதியில் இரவு 10.00 மணிக்கு கூடிவிளையாடு பாப்பா நாடகத்தை மேடையேற்றினோம். அந்த நாடகத்துக்காகவே சிறுவர்கள் ஆவலோடு காத்திருந்து நாடகத்தின் இடையிடையேயும் முடிவிலும் மேடையில் ஏறி தாமும் நாடகத்தில் ஒரு பங்காகியது மெய்சிலிர்க்க வைத்தது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கடந்தும் குழந்தை ம. சண்டுகலிங்கம் எழுதிய நாடகம் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் இவ்வளவு வரவேற்பைப் பெறுவது ஆச்சரியமளிக்கிறது. ஒரு சிறந்த கலைப்படைப்பு காலத்துள் வாழுமென்று சொல்வது இதைத்தானோ? படங்களில் சிறுவர்களின் குதூகலிப்பைப் பாருங்கள்!!!!